states

img

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் சிதறியது பாஜக கூட்டணி

ராஞ்சி ஜார்க்கண்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 45 க்கும் குறைவான நாட்களே இருப்ப தாக அதிகாரப்பூர்வமற்ற செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு முன்பே பாஜக கூட்டணியில் பிளவு தீவிரமடைந்து வருகிறது. ஜார்க்கண்ட் சட்டமன்ற  தேர்தலில் ஜேஎம்எம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் - ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம், ஜார்க் கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ் வான்), ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகள் இணைந்து ஜார்க்கண்ட் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. 

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் உள்ள 81 இடங்களில் 28 இடங்கள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள் ளன. இந்த 28 தொகுதிகளில் ஒன்றைக்  கூட தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்று பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச் சர் சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது மற்றொரு ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம்  மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியும் பாஜக கூட்டணி யில் இருந்து விலகி தனித்து போட்டி யிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பீகார் தலைநகர் பாட்னா வில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிதன் ராம் மஞ்சி கூறு கையில்,”14 இடங்களில் நாங்கள்  பலமாக இருக்கிறோம். ஆனால் தொ குதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் செல்வாக்கு உள்ள இடங்க ளில் தனித்து போட்டியிட முடிவு செய் துள்ளோம்” என அவர் கூறினார். ஜிதன் ராம் மஞ்சியின் இந்த முடிவு பாஜக விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. தற்போது பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் மட்டுமே உள்ளது.

அடிதடி தொடர வாய்ப்பு

“ஜார்க்கண்ட் பாஜக கூட்டணி யில் 99% இடங்களில் உடன்பாடு ஏற் பட்டுள்ளது. லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி களை தவிர்த்து மற்ற கட்சிகளின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது” என அம்மாநில பாஜக பொறுப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள் ளார். ஹிமந்தா பிஸ்வாவின் கருத் தால் அதிருப்தியடைந்த லோக் ஜன சக்தி, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கூட்டணி யை விட்டு வெளியேறியுள்ளன. 

அடுத்ததாக ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் பாஜக கூட்டணிக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாணவர் சங்க தலைவர் சுரேஷ் மஹதோ தில்லிக்குச் சென்று அமித் ஷாவிடம் கலந்துரையாடி 16 இடங்க ளை கேட்டுள்ளார். அதே போல ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் 11 இடங்களைக் கோரியுள்ளது. 

ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு 10 முதல் 11 இடங்களுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஜார்க் கண்ட் பாஜக மாநில தலைமை கூறி யுள்ளது. இதற்கு ஜார்க்கண்ட் மாண வர் சங்கம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ள தாக செய்திகளும் வெளியாகி வரு கின்றன. இதனால் பாஜக கூட்டணிக் குள் மேலும் அடிதடி தொடர வாய்ப்புள் ளது என எதிர்பார்க்கப்படுகிறது.